4
அறிவிலும் ஆற்றலிலும் கூர்மை உடைய தமிழகத் தமிழனை மழுங்கடிப்பது எது ? அதனைக் கண்டறிந்து விலக்காதவரை விடிவு இல்லை.
வாழையடி வாழையென
வந்த தமிழ் மக்கள்




மக்களாட்சி என்பது மக்களை மக்களே ஆளுவது என்பது தானே.

மக்களில் வேறுபாடு கண்டு ஒரு கண்ணில் ஈட்டி பாய்ச்சுவது எதனால் ? அடிப்டையிலேயே நிறைய குளறுபடிகள் மூளையில் ஏற்றப்பட்டு உள்ளன. அவை கண்டறியப்பட்டு மனிதனாக மேலெழக் கூடாது என்பதற்காகவே இலவசங்கள், சலுகைகள், கண்துடைப்புகள், போதைகள், மயக்குமொழிகள், வெவ்வேறு வாய்கள் வழி வந்து கொண்டிருக்கின்றன.

எது சரி ? எது தவறு ? என்று சிந்திக்கும் திறன் இழந்த, ஆட்டு மந்தைகளாய் மக்கள் மாற்றப்படும் பொழுது அவர்களது வாய் திறவாது. இந்த நுட்பத்தை எத்தனை ஆண்டுகளுக்கு வண்ண வண்ண சொற்களில் வகை வகையாய் நிகழ்த்திக் காட்டுவது. நேற்று நடந்ததை இன்று மறந்து விடுகின்றான். தன்நலத்தோடு வாழும் மனிதனாய் மாற்றப்பட்ட இவன் எப்படித் தெளிவாகச் சிந்திப்பான்...

மழலையிலிருந்தே மூளைச்சலவை செய்யப் படுகிறான். தொடரும் அனைத்துச் சூழலும் அவனை அப்படியே வளர்த்தெடுக்கிறது. எப்படி இவனிடம் மாபெரும் ஆற்றலும், நுட்பமும் கிளர்ந்து எழும்...அறுபது ஆண்டுகளுக்கு முன் சுதந்திரம் அடைய பட்டபாடும், சிந்திய இரத்தமும், உயிர் ஈகமும் இதற்காகவா ? கையேந்தி நிற்கவா ? விடுதலைப்போரின் ஈகத்தையும் நாட்டுப்பற்றையும் மனித நேயத்தையும் உணர்ந்தவர்களால்தான் மக்களை மேலெழச் செய்ய முடியும்,

மேலெழத் துடித்து ஈகம் புரியும் மக்களால்தான் நாடு மேலெழும்.

அன்புடன் - பொள்ளாச்சி நசன் - 14.3.09

வந்த இதழ்கள்


வந்த படைப்புகள்

தமிழம் வலையின் பார்வையாளர்கள் படைப்பாளிகளாக இருந்தால் தங்களின் தரமான படைப்பாக்கங்களை எங்களுக்கு அனுப்பி வையுங்கள். உங்கள் படைப்புகள் பொழுது போக்கிற்கு எழுதுபவையாக இருக்க வேண்டாம். எழுத்தும் ஒரு கருவி என்ற உணர்வோடு, சமூக அவலங்களை, நெருக்குதல்களை, மனிதம் சீரழிக்கப் படுவதை இலக்கியப் பதிவாக எழுதி அனுப்புங்கள். தரமான படைப்புகள் இந்தப் பக்கத்தில் வலையேற்றப்படும்.... [ உள்ளே ]

பழைய இதழ்கள்


கிடைத்தற்கரியவை

கணக்கதிகாரம் என்ற இந்த நூலினை முழுமையாக வலையிறக்கி, தமிழ் வல்லுநர்கள் இது பற்றி எழுதுமாறு பணிவுடன் வேண்டுகிறேன். [உள்ளே]




தமிழ் நாள் காட்டிகள்

தெளி தமி்ழில் பேசுவது, தமிழ்ப் படிக்கத் தெரிவது என்பவற்றோடு தமிழ்த் திங்களையும் தமிழ் எண்ணையும், தமிழ் எண்ணிலமைந்த நாள் காட்டியையும் அறிந்து கொள்வது தமிழ் உணர்வூட்டுவதே. கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ் நாள்காட்டியை அச்சாக்கி விற்பனை செய்வது என்பது அதிகரித்துள்ளது. சென்ற ஆண்டு 6 வகையான நாள் காட்டி வெளியிடப் பட்டது. இந்த ஆண்டும் வெளியிடுவார்கள் என்று நம்புகிறேன். அவ்வாறு வெளியிடும் நாள் காட்டி பற்றிய குறிப்புகளை வெளியிடுவதற்காகவே இந்தப் பக்கத்தை இணைத்துள்ளேன்....[உள்ளே]

புகைப்படப் பக்கம்


நடக்கிற நிகழ்வுகளை,
பார்க்கிற அரிய
காட்சிகளை,
புகைப்படமாக்கி
எமக்கு அனுப்பவும்.
இவை
ஆவணங்களாகி
வரலாற்றைச்
சொல்லட்டும்.... [உள்ளே]
கேட்டு மகிழ்ந்தவை


தோணி புடிச்சி படகு புடிச்சி
தொலை தூரப்பயணம்
தமிழன் போனான்
கரைபோயி சேர்ந்தது பாதி
அய்யோ
கடலோட போனது மீதி
வந்த மின்அஞ்சல்கள்


I saw for example, "tani pacura tokai" (A book of Sonnets in Tamil) of VG Suryanarayana Sastri published in 1901 in PDF. We can use files like this to prepare etxts for distirbution via Project Madurai. I am impressed by the content of works listed in your webpage........ [உள்ளே]

...