வாழையடி வாழையென
வந்த தமிழ் மக்கள்
|
|
அன்புடையீர் - வணக்கம்.
நெஞ்சு வெடிக்கிறது. வருகிற ஒவ்வொரு செய்தியும், ஈழத் தமிழர்கள் படுகிற இன்னல்களும் வேதனையை ஆக்குகிறது. இன அழிப்பு
என்பதனை பல்வேறு பொய்களைக் கூறி அழிக்கத் தொடங்கியுள்ளது சிங்கள அரசு.
புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் நம் தமிழ் மக்கள் பல்வேறு வகையான போராட்டங்களை, எதிர்ப்புக் குரல்களை பதிவு செய்து வருகின்றனர்.
சொந்த மண்ணில், வாழ்ந்த மண்ணில், வாழ விடாது ஓட ஓட விரட்டுகிற இராணுவ நடவடிக்கைகளை எப்படித் தாங்குவது ?
காவல்துறை, நீதித்துறை, போக்குவரத்துத் துறை, மரபு வழியிலான இராணுவம் என நாட்டிற்கான அத்தனை முறைப்படுத்தல்களுடன் ஆளுமை
செய்து வந்த விடுதலைப்புலிகள் அமைப்பு பல்வேறு பொருண்மிய மேம்பாடுகளை முன்னெடுத்துக் கொண்டிருந்த போதிலும் சர்வதேசம் ஈழத்தை
ஒரு நாடாக ஏற்றுக் கொள்ளவில்லை. திட்ட மிட்ட சதியால் நாட்டிற்கான அர்பணிப்பு என்பது தீவிரவாதமாகத் திசை திருப்பப் பட்டு, அரச பயங்கரவாதம்
தலை தூக்கித் தொடருகிறது. நெஞ்சு வெடிக்கிறது
அன்புடன் - பொள்ளாச்சி நசன் -
|