|
|
அன்புடையீர் - வணக்கம்.
ஒவ்வொரு திங்களும் தமிழம் வலையின் ஒருங்குறிப் பக்கத்தை வடிவமைத்து வலையேற்றுவது
என்பது எளிமையானதாக மாறிவிட்டது. படைப்பாளர்களும், புகைப்படக் கலைஞர்களும் உதவுவது
நிறைவாக இருக்கிறது. வலைப் பக்கத்தை உடனே வடிவமைக்க உதவி செய்கிறது.
நம் அருகிலேயே நம் தமிழ் மக்கள், நம் தொப்புள் கொடி உறவுகள்...
ஈழ மண்ணில் சொல்லொணாத் துயரம் அடைவது கேட்டும், பார்த்தும் நெஞ்சு வெடிக்கிறது.
உலகத்தால் தடைசெய்யப்பட்ட கொத்துக் குண்டுகள் வீசியும்,
நச்சுக் குண்டுகள் வீசியும் அழிக்கப்டுகிற செய்தி அறிந்து தடுமாறுகிறோம்.
பிஞ்சுக் குழந்தைகள், மழலையர்கள், சிறுவர்கள் அழிக்கும் செய்தி அமிலமாக
நுழைகிறது. கர்ப்பிணிப் பெண்களும், அகவை முதிர்ந்தவர்களும் உறுப்பிழந்து
கிடப்பது கண்டு செய்வதறியாது திகைக்கிறோம்.
மனிதம் தொலைந்து போன மாக்களோடு எப்படி இணைந்து வாழ்வது.
எது பாதுகாப்பான பகுதி. உலக அறிஞர்கள் இதற்கு விடை சொல்ல வேண்டும்.
உலகம் மட்டும் அல்ல இந்தியாவும் தான்.
அன்புடன் - பொள்ளாச்சி நசன் - 14.4.09
|
|