7
விழிப்புற்றுத் தமிழரெல்லாம் எழல் வேண்டும், வெள்ளம் முன் அணை போடற்கே - பெருஞ்சித்திரனார்.



அன்புடையீர் - வணக்கம்.

  • கடந்த திங்களின் ஒவ்வொரு நாளிலும், தமிழர்களின் மீது பேரிடியாய் இறங்கிய பல்வேறு வகையான குண்டுகள் அனைத்தும், மனச்சாட்சியுள்ள அனைவரையுமே செயலிழக்க வைத்தன. சாட்சி இல்லாமலேயே ஒரு சண்டை நடந்து முடிந்து விட்டது. எதை நம்புவது, எதை நம்பாமல் இருப்பது என்றே பல நாள்கள் ஓட்டிவிட்டன.

  • நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு தமிழ் மக்கள் கொல்லப்பட்டும், உறுப்புகள் இழந்தும், அலைக்கழிக்கப்பட்டும் நிகழ்த்தப்பட்ட நிகழ்வுகள் மறக்க முடியாதவை. வரலாற்றின் கறுப்புப் பக்கங்கள் இவை. இதனை அரங்கேற்றி முகத்திரை கிழிந்த இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் கூட்டுச் சதியால் அப்பாவித் தமிழர்கள் நிலைகுலைந்துள்ளனர். இன்னும் கம்பி வேலிகளுக்குப் பின் வாடும் அவர்களது நிலைமை அறிந்து நெஞ்சு வெடிக்கிறது.

  • துள்ளிக் குதித்த நாட்டில், அடிமைகளாய் கையேந்தி நிற்கும் நிலை, உளவியல் அடிப்படையில் சிதைந்து நிற்கும் நிலை, வீடு திரும்புவோமா என்று காத்திருக்கும் நிலை - வேதனைக்குரியது. புலம் பெயர்ந்த சொந்தங்களால் அனுப்பப்பட்ட வணங்காமண் கப்பலில் வந்த உணவையே தடுத்துக் கிடைக்க விடாது செய்யும் சிங்கள வல்லாதிக்க மனோநிலை. ஒரு கவளம் உணவிற்கே இப்படித் தடைபோடும் சிங்களம், தமிழர்களைத் தன் சொந்த மண்ணுக்குத் திரும்பவிட விரும்புமா என்பதை உலகநாடுகள் ஏன் விளங்கிக் கொள்ள மறுக்கின்றன.

  • எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, சொந்த நாட்டிலே... உலகநாடுகள் உணரும் காலம் விரைவில் வரும். அதுவரை எத்தனை இழந்தாலும் மீண்டும் வென்றெடுக்கக்கூடிய நெஞ்சுரத்தோடு ஏதிலியாய் நிற்கும் தமிழ் மக்களுக்காக நாம் துணை நிற்போம். தமிழீழம் மலரும். புலிக்கொடி பறக்கும்.

    அன்புடன் - பொள்ளாச்சி நசன் - 4.7.09

  • தமிழம் வலை வருந்துகிறது

    தமிழ் உணர்வோடு, தொடர்ந்து இயங்கிய....
    யாதும் ஊரே இதழாளர் திருமிகு சொக்கலிங்கம்,
    தெளிதமிழ் இதழாளர் திருமிகு இரா. திருமுருகனார்
    ஆகிய இருவரின் இழப்பும் ஈடுசெய்ய முடியாதது.
    இவர்களது நினைவு மலரை வலையிறக்கிப் படிக்கவும்
    அவர் விட்டுச் சென்ற பணியை இனித் தொடருவோம்..


    நா.வை. சொக்கலிங்கம்
    நினைவு மலர். (1.30 MB)
    திருமுருகனார்
    நினைவு மலர். (1.55 MB)
    கிடைத்தற்கரியவை

    அச்சாகி வெளிவந்த நூல்களில் உடைந்து போகும்
    நிலையில் உள்ள பழைய நூல்களைப் படவடிவக்
    கோப்புகளாக்கிப் பாதுகாக்கும் முறையை அறிந்து
    தமிழம் வலையில் உள்ள நாள் ஒரு நூல்
    என்ற பகுதியில் பாதுகாத்து வருகிறேன்.
    அதில் உள்ள இரண்டு நூல்கள் இங்கே உள்ளன.
    இன்று வரை தமிழம் வலையில் 700 பழைய
    இதழ்கள் / நூல்களை நாள் ஒரு நூல் பகுதியில்
    வலை ஏற்றி உள்ளேன். படவடிவக் கோப்புகளை
    வலையிறக்கிப் பயன்படுத்தவும்


    கல்லாடம் (5.49 MB)
    சூடாமணி நிகண்டு
    மூலமும் உரையும்

    (7.03 MB)
    (4.11 MB)
    பழைய இதழ்கள்


    வந்த இதழ்கள்


    வந்த படைப்புகள்

    தமிழம் வலையின் பார்வையாளரான நீங்கள் படைப்பாளியா ?........
    உங்களின் தரமான படைப்பாக்கங்களை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்.......
    உங்கள் படைப்புகள் பொழுது போக்கிற்கு எழுதுபவையாக இருக்க வேண்டாம்......
    எழுத்தும் ஒரு கருவி என்ற உணர்வோடு, சமூக அவலங்களை, நெருக்குதல்களை, மனிதம் சீரழிக்கப் படுவதை இலக்கியப் பதிவாக எழுதி அனுப்புங்கள்.........
    தரமான படைப்புகள் இந்தப் பக்கத்தில் வலையேற்றப்படும்.... [ உள்ளே ]

    தமிழ் நாள் காட்டிகள்

    தெளி தமி்ழில் பேசுவது, தமிழ்ப் படிக்கத் தெரிவது என்பவற்றோடு தமிழ்த் திங்களையும் தமிழ் எண்ணையும், தமிழ் எண்ணிலமைந்த நாள் காட்டியையும் அறிந்து கொள்வது தமிழ் உணர்வூட்டுவதே. கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ் நாள்காட்டியை அச்சாக்கி விற்பனை செய்வது என்பது அதிகரித்துள்ளது. சென்ற ஆண்டு 6 வகையான நாள் காட்டி வெளியிடப் பட்டது. இந்த ஆண்டும் வெளியிடுவார்கள் என்று நம்புகிறேன். அவ்வாறு வெளியிடும் நாள் காட்டி பற்றிய குறிப்புகளை வெளியிடுவதற்காகவே இந்தப் பக்கத்தை இணைத்துள்ளேன்....[உள்ளே]

    புகைப்படப் பக்கம்

    வெற்றிக்கொடி கையில் எடு
    வெல்வோம் எனச் சொல்லி எழு
    பெற்ற வெற்றி கொஞ்சமில்லை
    எந்தப் பெரும் படைக்கும் அஞ்சவில்லை
    சண்டை எங்கள் தனிக்கலை
    வரும் சாவைக் கொண்டே கூண்டில் அடை
    கொண்ட கொள்கை வெல்லும் வரை புலி
    கோலம் மாறப் போவதி்ல்லை

    வந்த மின்அஞ்சல்கள்


    தங்களது அயராத உழைப்பால் இணைய உலாவரும் தமிழம் இணையத்தை எனது தோரணம் வலைப்பதிவில் கவனத்துக்குரிய இணையமாக இணைத்துள்ளேன். தங்களது பணி மேலும் வளம் பெற அன்புடன் வாழத்துகிறேன்.... முகிலன் .....[உள்ளே]

    ...